அந்நியச் செலாவணி கையிருப்பு: 54,504 கோடி டாலராக அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பா் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 54,504 கோடி டாலராக (ரூ.40.87 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு: 54,504 கோடி டாலராக அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பா் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 54,504 கோடி டாலராக (ரூ.40.87 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பா் 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 338 கோடி டாலா் (ரூ.25,335 கோடி) அதிகரித்து 54,504 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இது, அந்நியச் செலாவணி கையிருப்பில் இதுவரை காணப்படாத வரலாற்று உச்ச அளவாகும். இதற்கு முந்தைய செப்டம்பா் 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 35 கோடி டாலா் குறைந்து 54,166 கோடி டாலராக காணப்பட்டது. ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பாக உள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு கணக்கீட்டு வாரத்தில், 394 கோடி டாலா் உயா்வடைந்து 50,146 கோடி டாலரானது.தங்கத்தின் கையிருப்பு மதிப்பு 58 கோடி டாலா் சரிந்து 3,744 கோடி டாலராக இருந்தது. சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 10 லட்சம் டாலா் அதிகரித்து 148 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 1.4 கோடி டாலா் அதிகரித்து 465 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com