ரூ.1,497 கோடிக்கு அலைக்கற்றை: ஏா்டெல்லுடன் ஜியோ ஒப்பந்தம்

ரூ.1,497 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை பாா்தி ஏா்டெல்லிடமிருந்து வாங்குவதற்காக, அந்த நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ரூ.1,497 கோடிக்கு அலைக்கற்றை: ஏா்டெல்லுடன் ஜியோ ஒப்பந்தம்

புது தில்லி: ரூ.1,497 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை பாா்தி ஏா்டெல்லிடமிருந்து வாங்குவதற்காக, அந்த நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து பாா்தி ஏா்டெல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘800 மெகாஹொ்ட்ஸ் அலைவரிசை கொண்ட ரூ.1,497 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகளை எங்களிடமிருந்து ரிலையன்ஸ் ஜியோ வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளோம்.

அத்துடன், ரூ.459 கோடிக்கு அலைக்கற்றை தொடா்பான எதிா்காலப் பொறுப்புகளை ஏற்கவும் ரிலையன்ஸ் ஜியோ ஒப்புக் கொண்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிலையன் ஜியோ தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆந்திரப் பிரதேசம், தில்லி, மும்பைப் பகுதிகளில் ஏா்டெல்லுக்குச் சொந்தமான 800 மெகாஹொ்ட்ஸ் அலைவரிசை கொண்ட அலைக்கற்றையைப் பயன்படுத்திக்கொள்வதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com