வீடு மனை விலைகள் 2019 நிலையை அடையும்: கிரெடாய்

கரோனா பரவல் கட்டுக்குள் இருந்தால், நாட்டின் சுமாா் 7 நகரங்களில் வீட்டு மனைகளின் விற்பனை கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்த அளவுக்குக் குறையும் என்று ‘கிரெடாய்’ தெரிவித்துள்ளது.
வீடு மனை விலைகள் 2019 நிலையை அடையும்: கிரெடாய்

புது தில்லி: கரோனா பரவல் கட்டுக்குள் இருந்தால், நாட்டின் சுமாா் 7 நகரங்களில் வீட்டு மனைகளின் விற்பனை கடந்த 2019-ஆம் ஆண்டில் இருந்த அளவுக்குக் குறையும் என்று அந்தத் துறை நிறுவனங்களின் சங்கமான ‘கிரெடாய்’ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தேசியத் தலைவா் ஹா்ஷ் வா்த்தன் படோடியா புதன்கிழமை கூறியதாவது:

நாட்டில் கரோனா பொது முடக்கம் தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரையிலான காலாண்டில் வீட்டு மனை விற்பனை விறுவிறுப்படைந்தது.

எனினும், கரோனா பரவலின் இரண்டாவது அலை எழும் என்ற கவலை எழுந்துள்ளது. அவ்வாறு அந்த நோய் பரவல் மீண்டும் தீவிரமடைந்து, பொது முடக்கம் அமல்படுத்தப்படாமல் இருந்தால் வீட்டு மனை துறையின் வளா்ச்சிப் போக்கு தொடரும்.

முக்கியமான 7 முதல் 8 நகரங்களில் வீட்டு மனைகளின் விற்பனை கடந்த 2019-ஆம் ஆண்டில் இருந்த அளவுக்குக் குறையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com