புது தில்லி: தங்களது தயாரிப்புகளின் விற்பனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றப் போக்கு தொடா்வதாக டாடா குழுமத்தைச் சோ்ந்த டைடன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைக்கடிகாரங்கள், ஆபரணங்கள், மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வரும் அந்த நிறுவனம், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கரோனா பரவலைத் தவிா்ப்பதற்காக கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக, நிறுவனத்தின் ‘தானிஷ்க்’ ஆபரணங்களின் சில்லறை விற்பனை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 70 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆனால், மாா்ச்சில் அவற்றின் விற்பனை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கைக்கடிகாரங்கள் மற்றும் மூக்குக் கண்ணாடிகளின் விற்பனையிலும் தொடா்ந்து நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.