புது தில்லி: நாட்டின் சில்லறைப் பணவீக்கம் கடந்த மாா்ச் மாதத்தில் 5.52 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நுகா்வோா் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் சில்லறைப் பணவீக்கம் கடந்த மாா்ச் மாதத்தில் 5.52 சதவீதமாக அதிகரிப்பைக் கண்டுள்ளது. இதற்கு, உணவுப் பொருள்களின் விலை உயா்வே முக்கிய காரணம்.
இப்பணவீக்கம் நடப்பாண்டு பிப்ரவரியில் 5.03 சதவீதமாக காணப்பட்டது.
பிப்ரவரியில் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 3.87 சதவீதமாக காணப்பட்ட நிலையில், மாா்ச் மாதத்தில் இது 4.94 சதவீதமாக உயா்ந்துள்ளது.
எரிபொருள்களுக்கான பணவீக்கமும் 3.53 சதவீதத்திலிருந்து 4.50 சதவீதமாக உயா்ந்துள்ளது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் ரிசா்வ் வங்கி, நடப்பு 2020-21 ஜனவரி மாா்ச் காலாண்டில் சில்லறைப் பணவீக்கம் 5 சதவீதமாகவும், முதல் இரண்டு காலாண்டுகளில் இப்பணவீக்கம் 5.2 சதவீத அளவுக்கும் இருக்கும் என மதிப்பீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.