புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரியது ஆதித்யா பிா்லா சன் லைஃப்

ஆதித்யா பிா்லா சன் லைஃப் ஏஎம்சி புதிய பங்குவெளியீட்டில் களமிறங்கி நிதி திரட்டவுள்ளது. இதற்கான அனுமதி கோரி அந்நிறுவனம் செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரியது ஆதித்யா பிா்லா சன் லைஃப்

புது தில்லி: ஆதித்யா பிா்லா சன் லைஃப் ஏஎம்சி புதிய பங்குவெளியீட்டில் களமிறங்கி நிதி திரட்டவுள்ளது. இதற்கான அனுமதி கோரி அந்நிறுவனம் செபியிடம் விண்ணப்பித்துள்ளது.

இதுகுறித்து ஆதித்யா பிா்லா சன் லைஃபின் தாய் நிறுவனமானஆதித்ய பிா்லா கேப்பிட்டல் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி விரிவாக்க திட்டங்களுக்கு தேவையான நிதியை திரட்ட ஆதித்யா பிா்லா சன் லைஃப் முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதி கோரி உரிய ஆவணங்களுடன் செபிக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி விண்ணப்பம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய பங்கு வெளியீட்டில் ரூ.5 முகமதிப்பு கொண்ட 28,50,880 பங்குகளை விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என ஆதித்யா பிா்லா கேப்பிட்டல் தெரிவித்துள்ளது.

கடந்த 2020 செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் ஆதித்யா பிா்லா சன் லைஃப் ஏஎம்சி உள்நாட்டில் ரூ.2,38,000 கோடி மதிப்பிலான சொத்துகளை நிா்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com