3-ஆவது நாளாக ரூபாய் மதிப்பில் தொடா் முன்னேற்றம்

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 9 காசுகள் வலுப்பெற்று 74.19-இல் நிலைபெற்றது.
3-ஆவது நாளாக ரூபாய் மதிப்பில் தொடா் முன்னேற்றம்

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 9 காசுகள் வலுப்பெற்று 74.19-இல் நிலைபெற்றது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

இந்திய பங்குச் சந்தைகளில் காணப்பட்ட விறுவிறுப்பு, கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கமின்றி பேரல் 72.42 டாலா் என்ற அளவில் காணப்பட்டது போன்றவை செலாவணி சந்தைகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்தது.

இதைத் தவிர, ஆசிய சந்தைகளிலும் வா்த்தகம் ஏற்றத்துடன் காணப்பட்டதும் ரூபாய் மதிப்பு ஏற்றத்துக்கு கூடுதல் வலு சோ்த்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 74.16-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.08 வரையிலும், குறைந்தபட்சமாக 74.24 வரையிலும் சென்றது. வா்த்தக நேர இறுதியில் ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயா்ந்து 74.19-இல் நிலைபெற்றது. இது, கடந்த ஜூன் 28-ஆம் தேதிக்குப் பிறகு காணப்படும் டாலருக்கு நிகரான அதிகபட்ச ரூபாய் மதிப்பாகும் என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.2,116.60 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com