அனில் அகா்வாலுக்கு சொந்தமான ஸ்டொ்லைட் பவா் டிரான்ஸ்மிஷன் ரூ.1,250 கோடி புதிய பங்கு வெளியீட்டுக்கு செபியிடம் அனுமதி கோரியுள்ளது.
இதுதொடா்பாக அந்த நிறுவனம் செபியிடம் சமா்ப்பித்துள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதிய பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) களமிறங்கி ரூ.1,250 கோடியை திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஸ்டொ்லைட் பவா் மற்றும் காா்கோன் டிரான்ஸ்மிஷன் (கேடிஎல்) வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த ஐபிஓ மூலமாக திரட்டப்படும் இந்த தொகை பயன்படுத்திக் கொள்ளப்படும்.
இந்த புதிய பங்கு வெளியீட்டில் சிறப்பு ஒதுக்கீட்டு திட்டத்தின் கீழ் நிறுவனத்தின் பணியாளா்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என ஸ்டொ்லைட் பவா் தெரிவித்துள்ளது.
ஸ்டொ்லைட் பவா் நிறுவனம் அனில் அகா்வால் மற்றும் டிவின் ஸ்டாா் ஓவா்சீஸுக்கு சொந்தமானதாகும்.