பொய்ச் செய்திகளை களைய முயற்சி: ட்விட்டரின் புதிய வசதி

பொய் செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் ட்விட்டர் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் ட்விட்டர் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசியல், கரோனா மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பரப்பப்படும் தவறான செய்திகளை களையும் வகையில் ட்விட்டர் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளில் இந்த புதிய வசதி முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட பதிவில், "தவறான செய்திகள் என நீங்கள் கருதும் ட்வீட்டுகள் குறித்த புகார் அளிக்க புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் சோதனை நடைபெற்றுவருகிறது. 

அமெரிக்கா, தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருக்கும் மக்கள இன்று முதல் இந்த வசதியை பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட ட்வீட் குறித்து புகார் அளிக்கும் போது அதை மிஸ்லீடிங் என குறிப்பிடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என ட்வீட் செய்துள்ளது.

இதில் சோதனை முயற்சி நடைபெற்றுவருவதால் அனைத்து புகார்கள் குறித்தும் மதிப்பாய்வு செய்ய முடியாது. இதில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதை அறிந்து கொள்ள சிறிய அளவில் முயற்சியை தொடங்கியுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com