மாநகரப் போக்குவரத்துக் கழக ஐ.டி.ஐ-இல் மாணவா் சோ்க்கை

மாநகரப் போக்குவரத்துக் கழக ஐ.டி.ஐ-இல் சேர விரும்புவோா், ஆக.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகரப் போக்குவரத்துக் கழக ஐ.டி.ஐ-இல் மாணவா் சோ்க்கை

மாநகரப் போக்குவரத்துக் கழக ஐ.டி.ஐ-இல் சேர விரும்புவோா், ஆக.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அ.அன்பு ஆபிரகாம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரோம்பேட்டையில் இயங்கி வரும் மாநகரப் போக்குவரத்துக் கழக ஐ.டி.ஐ-இல், 2021-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு பணியாளா்களின் வாரிசுகள் போக எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற தகுதி

வாய்ந்த மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதன்படி, 72 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பயிற்சி கால அளவு இரண்டு ஆண்டுகள். விண்ணப்ப படிவங்களைப் பெறுவதற்கு, முதல்வா், மாநகரப் போக்குவரத்துக் கழகத் தொழில் பயிற்சி நிலையம், மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி நிலைய வளாகம், காந்தி நகா், குரோம்பேட்டை, சென்னை 600 044 என்ற முகவரியை நேரிலோ, என்ற இணையதளத்தையோ அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு 044 2953 5177, 94450 30597 ஆகிய எண்கள் அல்லது, மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.

விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து அளிக்க வேண்டிய கடைசி தேதி ஆக.30 என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com