நவம்பர் மாதத்தில் ரூ. 1,31,526 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி:
இதில் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யிலிருந்து மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ. 27,273 கோடியும், மாநிலங்களின் ஜிஎஸ்டி-க்கு ரூ. 1.30 லட்சம் கோடியும் பிரித்து வழங்கப்பட்டன.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியலிருந்து ஏப்ரல் 2021-க்கு பிறகு அதிக வசூலானது கடந்த நவம்பர் மாதம்தான் என நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.30 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதத்தைக் காட்டிலும் இந்த நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் 25 சதவிகிதம் அதிகம்.
நிதியமைச்சகத்தின் தரவுகளின்படி அதிக ஜிஎஸ்டி வருவாய் ஈட்ட முதல் 3 மாநிலங்கள்: