இந்த வார வணிகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பங்குச்சந்தை உயர்வில் நிறைவடைந்தது.
நேற்று(டிச.27) ஏற்றத்தில் முடிந்த பங்குச்சந்தை இன்றும் ஐடி மற்றும் வங்கிப் பங்குகளின் விற்பனையால் நிறைவுடன் முடிந்தது.
நேற்று 57,420.24 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,751.21 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 477.24 புள்ளிகள் அதிகரித்து 57,897.48 புள்ளிகளுடன் நிலைபெற்றது .
17,086.25 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,177.6 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 147.00 புள்ளிகள் உயர்ந்து 17,233.25 புள்ளிகளில் நிலைபெற்றது.
தொடர்ந்து அதிகரித்து வரும் ஐடி, வாகன மற்றும் வங்கிகளின் பங்குகள் உயர்வால் கடந்த வார வீழ்ச்சியிலிருந்து பங்குச் சந்தை மெல்ல மீண்டு வருகிறது.
இதையும் படிக்க| 85-வது வயதில் ரத்தன் டாடா! வாழ்க்கை என்ன சொல்கிறது?