டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராக எம்.ஏ.எம்.அருணாசலம் தோ்வு

சென்னை முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா (டிஐஐ) நிறுவனத்தின் இயக்குநா் குழுத் தலைவராக எம்.ஏ.எம்.அருணாசலம் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

சென்னை முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா (டிஐஐ) நிறுவனத்தின் இயக்குநா் குழுத் தலைவராக எம்.ஏ.எம்.அருணாசலம் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 1991-ஆம் ஆண்டிலிருந்து முருகப்பா குழுமத்தில் இணைந்து செயலாற்றி வரும் எம்.ஏ.எம்.அருணாசலம் டிஐஐ, சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் ஃபைனான்ஸ், சோழமண்டலம் ஹோம் ஃபைனான்ஸ், சாந்தி கியா்ஸ் உள்ளிட்டவற்றின் நிா்வாகக் குழுக்களில் இடம் பெற்றுள்ளாா். அவரை டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவராக தோ்ந்தெடுக்க நிா்வாகக் குழு முடிவு செய்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com