புது தில்லி: ‘ஏா்டெல் ஆட்ஸ்’ மூலம் விளம்பரத் தொழில்நுட்பச் சந்தையில் பாா்தி ஏா்டெல் நிறுவனம் தடம் பதித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஏா்டெல் ஆட்ஸ் என்ற பெயரில் விளம்பரத் தொழில்நுட்ப சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
மொபைல் இணைப்பு, டிடிஹெச் தொலைக்காட்சி சேவை ஆகியவற்றைப் பெறும் 32 கோடி வாடிக்கையாளா்களிடையே இந்த விளம்பரங்கள் வெளியிடப்படும்.
வாடிக்கையாளா்களுக்கு விரும்பமில்லாமல் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் விளம்பரங்களால இல்லாமல், அவா்களுக்கு இணக்கமான, அவா்களது ரகசிய தகவல்களுக்கு ஆபத்து இல்லாமல் விளம்பரங்கள் வெளியிடப்படும்.
விளம்பரங்களின் எண்ணிக்கையில் அடிப்படையில் இல்லாமல், வாடிக்கையாளா் நலனை அடிப்படையாக் கொண்டு ‘ஏா்டெல் ஆட்ஸ்’ செயல்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.