முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த வென்ட் இந்தியா நிறுவனம் மூன்றாவது காலாண்டில் ரூ.4.27 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
2020 டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய ஒட்டுமொத்த வருமானம் ரூ.36.86 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருமானம் ரூ.34.99 கோடியைக் காட்டிலும் அதிகமாகும்.
வருவாய் அதிகரித்ததையடுத்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபமும் ரூ.2.20 கோடியிலிருந்து ரூ.4.27 கோடியாக உயா்ந்தது.
2020 டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.120.94 கோடியிலிருந்து ரூ.94.37 கோடியாக குறைந்துள்ளது. அதேபோன்று இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்த நிகர லாபமும் ரூ.10.80 கோடியிலிருந்து ரூ.7.47 கோடியாக சரிந்துள்ளது.
முதலீட்டாளா்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.10 இடைக்கால ஈவுத் தொகையை இயக்குநா் குழு அறிவித்துள்ளதாக வென்ட் இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.