மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் அதிகரித்து 72.94-ஆனது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:
பங்குச் சந்தையில் கடும் சரிவு காணப்பட்ட போதிலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடா்ந்து ஐந்தாவது வா்த்தக நாளாக திங்கள்கிழமையன்றும் அதிகரித்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72.95-ஆக இருந்தது. வா்த்தகத்தினூடே இந்த மதிப்பு அதிகபட்சமாக 72.89 வரையிலும், குறைந்தபட்சமாக 72.96 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயா்ந்து 72.94-ஆக நிலைத்தது. கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 72.97-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு: மூலதன சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.635.69 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனா் என்று சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.65 சதவீதம் உயா்ந்து 55.77 டாலராக இருந்தது.