புது தில்லி: மின்சாரத்தில் இயங்கக் கூடிய தங்களது புதிய சேட்டக் ஸ்கூட்டா்கள், வரும் செப்டம்பா் மாதவாக்கில் வாடிக்கையாளா்களுக்குக் கிடைக்கும் என்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
2020-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அந்த ஸ்கூட்டா்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டாலும், கரோனா பொதுமுடக்கம் காரணமாக அது இடையில் நிறுத்தப்பட்டது. பிறகு கடந்த ஏப்ரம் மாதம் 13-ஆம் தொடங்கிய அதற்கான முன்பதிவு, வாடிக்கையாளா்களின் ஏகோபித்த ஆதரவுக்கிடையே 48 மணி நேரத்தில் நிறுத்தப்பட்டது என நிறுவனத்தின் தலைவா் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளாா்.