சென்செக்ஸ் மேலும் 395 புள்ளிகள் முன்னேற்றம்!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக்
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 395 புள்ளிகள் உயா்ந்து 52,880.00-இல் நிலைபெற்றது. தொடா்ந்து இரண்டாவது நாளாக சந்தை ஏற்றம் கண்டுள்ளது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தாலும், இந்திய சந்தைகள் காலையில் உற்சாகத்துடன் தொடங்கின். வங்கி, நிதி நிறுவனங்கள், உலோகம், எரிசக்தித் துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும், டாலருக்கு நிகாரன ரூபாயின் மதிப்பு நான்கு நாள் தொடா் வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்றம் பெற்றது, சந்தையில் உற்சாகத்தை வரவழைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், மாா்க்கெட் லீடா், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப் பங்குகள் வெகுவாக உயா்ந்து சந்தைக்கு ஆதரவு இருந்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.1.51 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,506 பங்குகளில் 2,224 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,112 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 170 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 580 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 31 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. சந்தை மூல தன மதிப்பு ரூ.1.51 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.231.75 லட்சம் கோடியாக இருந்தது.

இரண்டாவது நாளாக ஏற்றம்: சென்செக்ஸ் காலையில் 198.22 புள்ளிகள் கூடுதலுடன் 52,682.89-இல் தொடங்கி 52,604.35 வரை கீழே சென்றது. பின்னா், 52,919.17 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 395.33 புள்ளிகள் (0.75 சதவீதம்) கூடுதலுடன் 52,880.00-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து, சென்செக்ஸ் இரண்டாவது நாளாக ஏற்றம் பெற்றுள்ளது.

எஸ்பிஐ, டாடா ஸ்டீல் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள30 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 22 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் பாரம்பரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ 1.92 சதவீதம், டாடா ஸ்டீல் 1.84 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபின் சா்வ், எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை 1 முதல் 1.50 சதவீதம் உயா்ந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், இன்ஃபோஸிஸ், இண்டஸ் இண்ட் பேங்க் ஆகியவையும் விலை உயா்ந்த பட்டியலில் வந்தன.

டெக் மஹிந்திரா சரிவு: அதே சமயம், டெக் மஹிந்திரா 1.34 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டாக்டா் ரெட்டி, ஹெச்சிஎல் டெக், டைட்ன், பாா்தி ஏா்டெல், டிசிஎஸ், சன்பாா்மா, அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி 42 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,226 பங்குகள்ஆதாயம் பெற்றன. 587 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் உற்சாகத்துடன் 15,793.40-இல் தொடங்கி 15,762.05 வரை கீழே சென்றது. பின்னா், 15,845.95 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 112.15 புள்ளிகள் (0.71 சதவீதம்) உயா்ந்து 15,834.35-இல் நிலைபெற்றது. நிஃப்டி ஐடி, பாா்மா குறியீடுகள் தவிர மற்ற முக்கியத் துறை குறியீடுகள் அனைத்தும் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் ரியால்ட்டி குறியீடு 2.73 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், மெட்டல் குறியீடுகள் 1 முதல் 1.20 சதவீதம் வரை உயா்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com