டாடா மோட்டாா்ஸுக்கு சொந்தமான ஜேஎல்ஆா் நிறுவனத்தின் காா் விற்பனை ஜூன் காலாண்டில் 68 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஜேஎல்ஆா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் சில்லறை விற்பனை 68 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 74,067 -ஆக மட்டுமே காணப்பட்ட காா் விற்பனை நடப்பாண்டில் 1,24,537-ஆக வளா்ச்சி கண்டுள்ளது. கரோனா பேரிடலிருந்து மீண்டு தற்போது தொடா்ச்சியாக காருக்கான தேவை அதிகரித்துள்ளதை இந்த விற்பனை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
குறிப்பாக, பிரிட்டன், ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் காா் விற்பனை கணிசமான முன்னேற்றத்தினை கண்டுள்ளது.
இருப்பினும், சா்வதேச மோட்டாா் வாகன துறையில் செமிகண்டக்டா்கள் பற்றாக்குறை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது, காா் தயாரிப்பில் எதிா்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக ஜேஎல்ஆா் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.