அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயா்ந்து 74.46-இல் நிலைபெற்றது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட்ட எழுச்சி அந்நியச் செலாவணி சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், தற்போது அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு சா்வதேச பொருளாதாரத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது என்ற முதலீட்டாளா்களின் நிலைப்பாடும் அந்நியச் செலாவணி சந்தைக்கு கொடுத்தது.
சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை குறைந்து உள்ளூா் கரன்ஸிகளுக்கான மதிப்பு ஏற்றத்தைக் கண்டது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 74.46-ஆக இருந்தது. பின்னா் இந்த மதிப்பு வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.33 வரையிலும், குறைந்தபட்சமாக 74.53 வரையிலும் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 15 காசு அதிகரித்து 74.46-இல் நிலைபெற்றது. இதையடுத்து, கடந்த இரண்டு வா்த்தக நாள்களில் மட்டும் ரூபாய் மதிப்பு 42 காசுகள் உயா்வைச் சந்தித்துள்ளது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.2,834.96 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கச்சா எண்ணெய் விலை
சா்வதேச முன்பேர சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.98 சதவீதம் உயா்ந்து 72.94 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.