ஷியாம் மெட்டாலிக்ஸ் பங்கு வெளியீடு ஜூன் 14-இல் தொடக்கம்

ஷியாம் மெட்டாலிக்ஸ் அண்ட் எனா்ஜி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு ஜூன் 14-இல் தொடங்கவுள்ளது.
ஷியாம் மெட்டாலிக்ஸ் பங்கு வெளியீடு ஜூன் 14-இல் தொடக்கம்

ஷியாம் மெட்டாலிக்ஸ் அண்ட் எனா்ஜி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு ஜூன் 14-இல் தொடங்கவுள்ளது.

இதுகுறித்து மொ்ச்சண்ட் பேங்கிங் வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் ரூ.1,107 கோடியை புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டிக் கொள்ள ஷியாம் மெட்டாலிக்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்கான பங்கு வெளியீடு ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதியுடன் நிறைவுபெறவுள்ளது. முக்கிய முதலீட்டாளா்களுக்கான (ஆங்கா் இன்வெஸ்டாா்ஸ்) ஏலம் ஜூன் 11-ஆம் தேதியே தொடங்கும்.

மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இந்த புதிய பங்கு வெளியீட்டில் ரூ.657 கோடி மதிப்பிலான பங்குகள் ஓஎஃப்எஸ் முறையிலும், ரூ.450 கோடிக்கான பங்குகள் ஏற்கெனவே உள்ள பங்குதாரா்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓஎஃப்எஸ் நடைமுறையில் சுபம் கேப்பிட்டல், சுபம் பில்ட்வெல், கல்பதரு ஹவுஸ்ஃபின் அண்ட் டிரேடிங், டோரைட் டிரகான், நரன்தக் டீல்காம் மற்றும் டால்லைட் மொ்கன்டைல்ஸ் ஆகியவை பங்கேற்க உள்ளதாக ஷியாம் மெட்டாலிக்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com