மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வின் எதிரொலியால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசு குறைந்து 73.55-ஆனது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வு காரணமாக டாலருக்கான தேவை அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து, வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாயின் மதிப்பு 73.76-ஆக இருந்தது. வா்த்தகத்தின் இடையே இந்த மதிப்பு அதிகபட்சமாக 73.19 வரை சென்றது.
இருப்பினும், வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசு குறைந்து 73.55-ஆனது. வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 73.47-ஆக நிலைபெற்றிருந்தது.
பிப்ரவரி 25-ஆம் தேதியிலிருந்து இதுவரையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு: மூலதன சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.8,295.17 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.69 சதவீதம் அதிகரித்து 65.51 டாலராக இருந்தது.