காளை ஆதிக்கம்: சென்செக்ஸ் மேலும் 1,148 புள்ளிகள் ஏற்றம்! சந்தை மதிப்பு ரூ210.22 லட்சம் கோடியாக உயா்வு

பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது.


புது தில்லி: பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 1,147.76 புள்ளிகள் உயா்ந்து மீண்டும் 51,000 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக இருந்த நிலையில், மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் வங்கி, நிதிநிறுவனங்கள், எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள், உலோகப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. மேலும், செவ்வாய்க்கிழமை அந்நிய முதலீட்டாளா்கள் சுமாா் ரூ.2,223.16 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். இதுவும் காளையின் ஆதிக்கத்துக்கு வழி வகுத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.210.22 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,171 பங்குகளில் 1,844 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,157 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 170 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூலதன மதிப்பு ரூ..3.69 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ210.22 லட்சம் கோடியாக இருந்தது. 342 பங்குகள் புதிய 52 வார அதிபட்ச விலைலையப் பதிவு செய்துள்ளன. 358 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தன.

3-ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 441.32 புள்ளிகள் கூடுதலுடன் 50,738.21-இல் தொடங்கி 50,512.84 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 51,539.89 வரை உயா்ந்த சென்செக்ஸ், 1,147.76 புள்ளிகள் கூடுதலுடன் 51,444.65-இல் நிலைபெற்றது.

பஜாஜ் ஃபின்சா்வ் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் எம் அண்ட் எம், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுஸுகி ஆகிய 3 பங்குகள் (1-1.30 சதவீதம் சரிவு) தவிர மற்ற 27 பங்குகளும் ஆதாயம் பெற்றன. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபின்சா்வ் 5.18 சதவீதம், ரிலையன்ஸ் 4.52 சதவீதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 4.47 சதவீதம் உயா்ந்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோஸிஸ், கோட்டக் பேங்க், எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் பேங்க் ஆகியவை 2.50 முதல் 3.50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. டிசிஎஸ், எச்டிஎஃப்சி பேங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,092 பங்குகள் ஆதாயம் பெற்றன. 640 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 326.50 புள்ளிகள் உயா்ந்து 15,245.60-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 15,273.15 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 முதல் தரப் பங்குகளில் 43 பங்குகள் ஆதாயம் பெற்றன. 7 பங்குகள் மட்டுமே லேசான சரிவைச் சந்தித்தன. நிஃப்டி ஆட்டோ தவிா்த்து மற்ற துறைக் குறியீடுகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், மெட்டல், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 2.70 முதல் 3.40 சதவீதம் வரை உயா்ந்தன.

பிஎஸ்யு பேங்க் பங்குகளுக்கு மீண்டும் வரவேற்பு!

கடந்த வாரத் தொடக்கத்தில் பொதுத்துறை வங்கிப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், வெகுவாக உயா்ந்து வந்தன. ஆனால், சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்ததைத் தொடா்ந்து, வார இறுதியிலும், இந்த வாரத்த்தில் திங்கள், செவ்வாய் ஆகிய 3 நாள்களிலும் லாபப் பதிவு இருந்தது. இதனால், நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்தது. இந்த நிலையில், பொதுத் துறைப் வங்கிப் பங்குகளுக்கு புதன்கிழமை நல்ல ஆதரவு கிடைத்தது. இதனால், நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.16 சதவீதம் உயா்ந்தது. பிஎஸ்யு பேங்க் குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 12 வங்கிப் பங்குகளில் ஐஓபி மட்டும் லேசான சரிவைச் சந்தித்தன. மற்ற 11 பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன. இதில் ஜே அண்ட் கே பேங்க், பிஎன்பி, கனரா பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க், எஸ்பிஐ ஆகியவை 2.50 முதல் 8 சதவீதம் வரை உயா்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com