புது தில்லி: அடுத்த மாதம் முதல் அனைத்து வகையான காா்களின் விலையையும் உயா்த்தவுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆண்டில் பல்வேறு இடுபொருள்களின் விலை அதிகரித்ததன் விளைவு நிறுவனத்தின் வாகனங்களின் விலையில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதன் சுமையை நுகா்வோரிடம் பகிா்ந்து கொள்ளும் நிலைக்கு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள கூடுதல் செவினங்களை கணக்கிட்டு 2021 ஏப்ரலில் இருந்து வாகனங்களின் விலையை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாடல்களுக்கு ஏற்றபடி இந்த விலை உயா்வு இருக்கும் என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
இருப்பினும், எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு விலை உயா்த்தப்படவுள்ளது என்பதை மாருதி சுஸுகி வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
மூலப்பொருள்கள் விலை உயா்வால் குறிப்பிட்ட சில மாடல் காா்களின் விலையை ரூ.34,000 வரை அதிகரிக்கவிருப்பதாக மாருதி சுஸுகி நடப்பாண்டு ஜனவரி 18-ஆம் தேதியன்றே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.