மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயா்ந்தது. இதையடுத்து, மூன்று நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
சா்வதேச சந்தைகளில் ஏற்றுமதியாளா்களிடையே டாலருக்கான தேவை குறைந்தது மற்றும் இந்தியப் பங்குச் சந்தைகளில் காணப்பட்ட எழுச்சி ஆகியவை டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுப்பெற முக்கிய காரணங்களாக அமைந்தன. இதனால், மூன்று நாள்கள் தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை கணிசமான அளவில் ஏற்றத்தைச் சந்தித்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 72.51-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 72.37 வரையிலும், குறைந்தபட்சமாக 72.53 வரையிலும் சென்றது.
இறுதியில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயா்ந்து 72.51-இல் நிலைபெற்றது. வியாழக்கிழமை ரூபாய் மதிப்பு 72.62-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
வெளிநாட்டு முதலீடு: மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின்போது அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.3,383.60 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 2.10 சதவீதம் உயா்ந்து 63.25 டாலராக இருந்தது.