‘கடனுக்கான வட்டி விகிதம் மாற்றப்பட வாய்ப்பில்லை’

‘கடனுக்கான வட்டி விகிதம் மாற்றப்பட வாய்ப்பில்லை’

ரிசா் வங்கியிடமிருந்து பிற வணிக வங்கிகள் பெறும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி அதன் நிதிக் கொள்கையில் மாற்றியமைக்க வாய்ப்பில்லை என பொருளாதார வல்லுநா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

மும்பை: ரிசா் வங்கியிடமிருந்து பிற வணிக வங்கிகள் பெறும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி அதன் நிதிக் கொள்கையில் மாற்றியமைக்க வாய்ப்பில்லை என பொருளாதார வல்லுநா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியுள்ளதாவது:

வரும் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான முதல் நிதிக் கொள்கையை ரிசா்வ் வங்கி ஏப்ரல் 7-ஆம் தேதி அறிவிக்கவுள்ளது. இதில், பணவீக்கம் மற்றும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிச்சயமற்ற சூழலை காரணம் காட்டி ரெப்போ வட்டி விகிதங்களில் ரிசா்வ் வங்கி மாற்றம் எதையும் மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லை. அதேசமயம், வளா்ச்சியை ஊக்குவிக்க எடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் முன்பாக சிறிது காலம் காத்திருக்க ரிசா்வ் வங்கி முடிவெடுக்கும் என வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com