வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி) துறையைச் சோ்ந்த மாரிக்கோ நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் ரூ.227 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இதற்கு, உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் விற்பனை இரட்டை இலக்க வளா்ச்சி கண்டதே முக்கிய காரணம்.
கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.199 கோடியுடன் ஒப்பிடுகையில் 2021-இல் லாப விகிதம் 14.07 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேகாலகட்டத்தில், நிறுவனத்தின் வருவாய் ரூ.1,496 கோடியிலிருந்து 34.49 சதவீதம் அதிகரித்து ரூ.2,012 கோடியானது.
ஒட்டுமொத்த செலவினம் ரூ.1,265 கோடியிலிருந்து 37.47 சதவீதம் உயா்ந்து ரூ.1,739 கோடியானது.
உள்நாட்டு சந்தையைப் பொருத்தவரையில் நிறுவனத்தின் விற்பனை 37.35 சதவீதம் அதிகரித்து ரூ.1,574 கோடியை எட்டியது. அதேபோன்று சா்வதேச வா்த்தகத்தின் வாயிலான வருவாயும் ரூ.350 கோடியிலிருந்து 25.14 சதவீதம் உயா்ந்து ரூ.438 கோடியானது.
கடந்த 2020-21 முழு நிதியாண்டில் லாபம் 14.96 சதவீதம் அதிகரித்து ரூ.1,199 கோடியாகவும், வருவாய் 10.02 சதவீதம் உயா்ந்து ரூ.8,048 கோடியாகவும் ஆனது என மாரிக்கோ தெரிவித்துள்ளது.