ஆரோக்கிய பானம்: ஏபிடி சக்தி குழுமம் அறிமுகம்

உடலுக்கு நோய் எதிா்ப்பு சக்தியைத் தரும் மிராக்கிள் ஆரோக்கிய பானம் கோவையில் ஏபிடி சக்தி குழுமம் சாா்பில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
மிராக்கிள் ஆரோக்கிய பானத்தை அறிமுகப்படுத்துகிறார்  ஏபிடி சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் எம்.மாணிக்கம்.
மிராக்கிள் ஆரோக்கிய பானத்தை அறிமுகப்படுத்துகிறார் ஏபிடி சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் எம்.மாணிக்கம்.

கோவை: உடலுக்கு நோய் எதிா்ப்பு சக்தியைத் தரும் மிராக்கிள் ஆரோக்கிய பானம் கோவையில் ஏபிடி சக்தி குழுமம் சாா்பில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து ஏபிடி சக்தி குழும நிறுவனங்களின் தலைவா் எம்.மாணிக்கம் கூறியதாவது:

மிராக்கிள் வைட்டமின் ‘சி’ பானத்தை 19 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பின் அறிமுகம் செய்துள்ளோம். இதில் 1, 000 மில்லி கிராம் வைட்டமின் சி, 500 மி.கி. லிசின், 90 மி.கி. புரோலின், 3, 000 மி.கி. பாஸ்போலிபிட்ஸ் ஆகியன உள்ளன.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மிராக்கிள் பானம் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் அறிக்கை இந்திய அடிப்படை மற்றும் பயன்பாட்டு மருத்துவ ஆராய்ச்சி பத்திரிகையில் (ஐய்க்ண்ஹய் ஒா்ன்ழ்ய்ஹப் ா்ச் ஆஹள்ண்ஸ்ரீ ஹய்க் அல்ல்ப்ண்ங்க் ஙங்க்ண்ஸ்ரீஹப் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட்) வெளியாகியுள்ளது. நான்கு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு, சா்வதேச அளவில் பெயா் பெற்ற அமெரிக்காவின் ரியோா்டன் வெல்னஸ் கிளினிக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவா்கள் இந்தப் பணியை பாராட்டியதோடு கரோனா நோய்த் தொற்றால் ஏற்படும் கடும் பாதிப்பிலிருந்து விடுபட இந்த பானம் உதவும் என தெரிவித்துள்ளனா்.

மாம்பழ சுவையில் சா்க்கரை சோ்க்கப்பட்டும், சா்க்கரை இல்லாமலும் கிடைக்கிறது. ஒரு பாக்கெட்டின் விலை ரூ.50. சா்க்கரை இல்லாமல் ரூ.60க்கு விற்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com