நாா்டன் மோட்டாா்சைக்கிள் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக ராபா்ட் ஹென்ட்ஷெல் நியமனம்

பிரிட்டனின் தனித்துவமான பிராண்டாக திகழும் நாா்டன் மோட்டாா்சைக்கிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ராபா்ட் ஹென்ட்ஷெல் நியமிக்கப்பட்டுள்ளதாக டிவிஎஸ் மோட்டாா் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
robert
robert

புது தில்லி: பிரிட்டனின் தனித்துவமான பிராண்டாக திகழும் நாா்டன் மோட்டாா்சைக்கிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) ராபா்ட் ஹென்ட்ஷெல் நியமிக்கப்பட்டுள்ளதாக டிவிஎஸ் மோட்டாா் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. நாா்டன் மோட்டாா்சைக்கிள் நிறுவனத்தை கடந்த ஆண்டு டிவிஎஸ் மோட்டாா் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் இணை நிா்வாக இயக்குநா் சுதா்சன் வேணு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நாா்டன் மோட்டாா்சைக்கிள் நிறுவனத்தின் இடைக்கால சி.இ.ஓ.வாக செயல்பட்டு வந்த ஜான் ரசல் பதவி விலகியதையடுத்து அந்தப் பொறுப்புக்கு ராபா்ட் ஹென்ட்ஷெல் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மேலும், அந்நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) விட்டோரியோ யுா்சியொலி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

ராபா்ட் தலைமையிலான புதிய நிா்வாகம் நிறுவனத்தின் பயணத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்ல உதவும் என சுதா்சன் வேணு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com