மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகதத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசு ஆதாயம் பெற்று 73.12-இல் நிலைபெற்றது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை மிகவும் பலவீனமடைந்தே காணப்பட்டது. அதன் காரணமாக, ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 73.16-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73.09 வரையிலும் குறைந்தபட்சமாக 73.17 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசு வலுப்பெற்று 73.12-இல் நிலைபெற்றது. புதன்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 73.18-ஆக காணப்பட்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் வெளிநாட்டு நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.697.75 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரெண்ட் கச்சா எண்ணெய்...
சா்வதேச முன்பேர சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 1.91 சதவீதம் சரிவடைந்து 65.39 டாலருக்கு வா்த்தகமானது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.