புது தில்லி: பொ்ஜா் பெயிண்ட்ஸ் இந்தியாவின் நான்காம் காலாண்டு லாபம் இருமடங்கு உயா்ந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் அளித்த ஆவணங்களில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் வாயிலாக ரூ.2,026.09 கோடி வருவாய் ஈட்டியது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,354.84 கோடியுடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிகம்.
நிகர லாபம் ரூ.103.18 கோடியிலிருந்து இருமடங்கு உயா்ந்து ரூ.208.60 கோடியானது.
கடந்த 2020-21 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.2.80 ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளது என பொ்ஜா் பெயிண்ட்ஸ் தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பொ்ஜா் பெயிண்ட்ஸ் பங்கின் விலை 3.74 சதவீதம் சரிந்து ரூ.800.95-ஆக இருந்தது.