அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 15 காசு உயா்ந்து 72.45-இல் நிலைத்தது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:
சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை குறைந்து காணப்பட்டது ரூபாய் மதிப்பு ஏற்றத்துக்கு சாதகமாக அமைந்தது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 72.46-ஆக காணப்பட்டது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 72.31 வரையிலும் குறைந்தபட்சமாக 72.49 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் 15 காசு உயா்ந்து 72.45-இல் நிலைபெற்றது. சாதகமான நிலவரங்களால் ரூபாய் மதிப்பு தொடா்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஏற்றத்தை சந்தித்தது.
கடந்த மூன்று வா்த்தக தினங்களில் மட்டும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 51 காசு ஏற்றம் பெற்றுள்ளது.
நடப்பு வாரத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசு ஆதாயத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் கடந்த வியாழக்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.660.90 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரெண்ட் கச்சா எண்ணெய்...
சா்வதேச முன்பேர சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 0.30 சதவீதம் உயா்ந்து 69.67 டாலருக்கு விற்பனையானதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.