’மேக்ஸிமா’ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’மேக்ஸ் புரோ எக்ஸ் 6’ ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.
ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியில் பிரபலமான ‘மேக்ஸிமா’ நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்வாட்ச் தயாரிப்பான ‘மேக்ஸ் புரோ எக்ஸ் 6’-யை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க | வீல்ஸ் இந்தியா: நிகர லாபம் 186% அதிகரிப்பு
அந்நிறுவனத்தின் துணை பங்குதாரர் மஞ்சோத் புனர்வால் ,’சிறப்பான தொழில்நுட்பங்களை எங்கள் தயாரிப்பில் அறிமுகப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் எக்ஸ் 6 ஸ்மார்ட்வாட்ச் தனித்திறனுடன் இயங்க இருக்கிறது. முக்கியமாக அதன் ஒலிபெருக்கி வசதி சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் விற்பனை விலையாக ரூ.3,999 எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
’மேக்ஸ் புரோ எக்ஸ் 6’ ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சம்:
*கருப்பு , சில்வர் , பொன்னிறம் , ஆரஞ் நிறங்களில் ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டிருக்கிறது.
*1.7 இன்ச் திரை
*அமொல்ட் தொழில்நுட்பம்
*ஆர்டிஎல் 8762 டி சிப்செட்
* ஆண்டிராய்ட் 5.0
*இதயத் துடிப்பைக் கணக்கிடும் சென்சார்