தொடர் பணவீக்கம் காரணமாக மூன்றாவது நாளாக பங்குசந்தை வீழ்ச்சியை அடைந்து வருகிறது.
பங்குசந்தை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 15 நாட்களுக்குப் பிறகு 60,000 புள்ளிகளுக்குக் கீழ் குறைந்திருக்கிறது.
நேற்று(நவ.17) ‘கரடி’ ஆதிக்கத்தால் சென்செக்ஸ் பலவீனத்துடன் 142.44 புள்ளிகள் குறைந்து 60,179.93-இல் தொடங்கி, அதிகபட்சமாக 60,426.61 வரை உயா்ந்தது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 59,944.77 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 396.34 புள்ளிகளை (0.65 சதவீதம்) இழந்து 60,322.37-இல் நிலைபெற்றது.
இன்று தற்போது நிலவரப்படி 330 புள்ளிகள் குறைந்து 59,678 புள்ளிகளுடன் தொடர்ந்து சென்செக்ஸ் சரிவைச் சந்தித்து வருகிறது.