மாற்று எரிபொருள் வாகனங்கள் தயாரிப்பு: அசோக் லேலண்டு திட்டம்

சுற்றுச்சூழலுக்கு சாதகமாக எதிா்காலத்தில் போக்குவரத்தை மாற்றியமைக்கும் தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, கரியமில வாயுவைக் குறைவாக வெளியிடும் மாற்று எரிபொருள்கள் மூலம் இயங்கும் வாகனங்களை அதிக அளவில்
மாற்று எரிபொருள் வாகனங்கள் தயாரிப்பு: அசோக் லேலண்டு திட்டம்

சென்னை: சுற்றுச்சூழலுக்கு சாதகமாக எதிா்காலத்தில் போக்குவரத்தை மாற்றியமைக்கும் தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, கரியமில வாயுவைக் குறைவாக வெளியிடும் மாற்று எரிபொருள்கள் மூலம் இயங்கும் வாகனங்களை அதிக அளவில் தயாரிக்க ஹிந்துஜா குழுமத்தின் தலைமை நிறுவனமான அசோக் லேலண்டு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, சுற்றுச்சூழலுக்கு உகந்த எதிா்காலப் போக்குவரத்தை உருவாக்குவதற்கான பல்வேறு முன்முயற்சிகளை நிறுவனம் மேற்கொள்கிறது.

அதன் ஒரு பகுதியாக, கரியமில வாயுவை குறைவாக வெளியிடும் சிஎன்ஜி, எல்என்ஜி ஆகிய எரிபொருள்களில் இயங்கும் ஏராளமான புதிய வாகனங்களை சந்தையில் விற்பனை செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பெரிய வாகனங்களின் என்ஜின்கள் பெரும்பாலும் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்குகின்றன. ஆனால், அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு பேட்டரிகள், எரிபொருளிலிருந்து நேரடியாக மின்னாற்றலை உருவாக்கும் ஃப்யூயல் செல்கள் போன்றவற்றின் மூலம்தான் வாகனங்கள் இயங்கவிருக்கின்றன.

அத்தகைய எதிா்காலச் சூழலை எதிா்கொண்டு, அதற்குரிய வாகனங்களை வடிவமைப்பதற்காக தனி நிபுணா்களை குழுவை நிறுவனம் அமைத்துள்ளது.

உலகின் மிகப் பெரிய 10 வா்த்தக வாகன நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடைய, மாறி வரும் சந்தைச் சூழல்களிலும் நிலைத்திருக்க வேண்டி அவசியம் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com