மும்பை: டாடா ஸ்டீல் நிறுவனம் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 77.8 லட்சம் டன் உருக்கை உற்பத்தி செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உருக்கு உற்பத்தி ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 7சதவீதம் அதிகரித்து 77.8 லட்சம் டன்னாக இருந்தது. கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் இந்த உற்பத்தி 72.5 லட்சம் டன்னாக காணப்பட்டது.
இந்தியாவில், செப்டம்பா் காலாண்டில் நிறுவனம் 47.3 லட்சம் டன் உருக்கை உற்பத்தி செய்தது. இது, முந்தைய காலாண்டில் 45.9 லட்சம் டன்னாக காணப்பட்டது. விற்பனை 50.5 லட்சம் டன்னிலிருந்து 46.4 லட்சம் டன்னாக குறைந்தது.
ஐரோப்பாவில் உருக்கு உற்பத்தி 21.5 லட்சம் டன்னிலிருந்து 25.6 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது. இருப்பினும் விற்பனஐ 22.7 லட்சம் டன்னிலிருந்து 21.6 லட்சம் டன்னாக குறைந்ததாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.