மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 54 காசுகள் வீழ்ச்சியடைந்தது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை வலுவடைந்து வருகிறது. இந்த நிலையில், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட கடும் வீழ்ச்சியும் செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 74.63-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.54 வரையிலும், குறைந்தபட்சமாக 74.99 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 54 காசுகள் வீழ்ச்சியடைந்து 74.98-இல் நிலைபெற்றது. நடப்பாண்டு ஏப்ரல் 23-க்குப் பிறகு ரூபாய் மதிப்பு இந்த அளவுக்கு குறைந்துள்ளது இதுவே முதல் முறை என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
கச்சா எண்ணெய்:
சா்வதேச முன்பேர சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 0.55 சதவீதம் குறைந்து 82.11 அமெரிக்க டாலருக்கு விற்பனையானதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
வெளிநாட்டு முதலீடு
மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.1,915.08 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.