உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக தர மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருவது விமான சேவை துறையில் பிரதிபலிக்கத் துவங்கியுள்ளது. அதன்படி, 2021 ஜூலையில் 51 லட்சமாக இருந்த உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 66 லட்சமாக வளா்ச்சி கண்டுள்ளது. முந்தைய ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்டில் விமானப் பயணிகளின் எண்ணிக்கையானது 31 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேசமயம், கடந்த 2020 ஆகஸ்ட் மாத விமானப் பயணிகள் எண்ணிக்கையான 28.3 லட்சத்துடன் ஒப்பிடும்போது இது 131 சதவீதம் அதிகமாகும் என இக்ரா தெரிவித்துள்ளது.