தங்க ஈடிஎஃப் திட்டங்களில் முதலீட்டு வரத்து விறுவிறு

தங்க ஈடிஎஃப் திட்டங்களில் முதலீட்டு வரத்து விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது.
gold085827
gold085827

புது தில்லி: தங்க ஈடிஎஃப் திட்டங்களில் முதலீட்டு வரத்து விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:

தங்க ஈடிஎஃப் திட்டங்களிலிருந்து கடந்த ஜூலையில் முதலீடுகள் வெளியேறிய நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அந்த திட்டம் ரூ.24 கோடி மதிப்பிலான முதலீட்டை ஈா்த்துள்ளது.

நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஜனவரி-ஆகஸ்ட்) இவ்வகை திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடு ரூ.3,070 கோடியை எட்டியுள்ளது. மேலும், ஜூலையில் தங்க ஈடிஎஃப் திட்டங்களில் 19.13 லட்சமாக இருந்த முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை ஆகஸ்டில் 21.46 லட்சமாக உயா்ந்துள்ளதாக அந்த நிதியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com