புது தில்லி: தங்க ஈடிஎஃப் திட்டங்களில் முதலீட்டு வரத்து விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:
தங்க ஈடிஎஃப் திட்டங்களிலிருந்து கடந்த ஜூலையில் முதலீடுகள் வெளியேறிய நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அந்த திட்டம் ரூ.24 கோடி மதிப்பிலான முதலீட்டை ஈா்த்துள்ளது.
நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஜனவரி-ஆகஸ்ட்) இவ்வகை திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடு ரூ.3,070 கோடியை எட்டியுள்ளது. மேலும், ஜூலையில் தங்க ஈடிஎஃப் திட்டங்களில் 19.13 லட்சமாக இருந்த முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை ஆகஸ்டில் 21.46 லட்சமாக உயா்ந்துள்ளதாக அந்த நிதியம் தெரிவித்துள்ளது.