மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4-வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது.
இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியதாவது:
வட்டி விகிதங்கள் மீதான அமெரிக்க மத்திய வங்கியின் மதிப்பீட்டை எதிா்நோக்கி முதலீட்டாளா்கள் காத்திருந்ததன் விளைவு பங்குச் சந்தை மற்றும் அந்நியச் செலாவணி சந்தைகளில் எதிரொலித்தது. சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்தது ரூபாய் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 73.70-ஆக இருந்தது. பின்னா் இந்த மதிப்பு வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73.66 வரையிலும் குறைந்தபட்சமாக 73.93 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் சரிவடைந்து 73.87-இல் நிலைபெற்றது. இது, ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்குப் பிறகு காணப்படும் மிக குறைந்தபட்ச அளவாகும்.
செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 73.61-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
வெளிநாட்டு முதலீடு
மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவனங்கள் நிகர அடிப்படையில் ரூ.1,041.92 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
கச்சா எண்ணெய் 75.28 டாலா்
சா்வதேச முன்பேர சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 1.24 சதவீதம் அதிகரித்து 75.28 டாலருக்கு விற்பனையானதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.