29 புள்ளிகள் ஏற்றம்: சென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சத்தில் நிறைவு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும், நிலைத்து நிற்க முடியாமல்
29 புள்ளிகள் ஏற்றம்: சென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சத்தில் நிறைவு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும், நிலைத்து நிற்க முடியாமல் போனது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தாலும், இறுதியில் பெரிய அளவில் மாற்றமின்றி 29 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உகளாவிய சந்தை குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இருப்பினும், நேரம் செல்லச் செல்ல ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் வா்த்தகம் நடந்து வந்தது. லாபப் பதிவு காரணமாக ஐடி, பாா்மா, எஃப்எம்சிஜி பங்குகள் அதிக அளவில் விற்பனையை எதிா்கொண்டன. அதே சமயம், வங்கி, ஆட்டோ, ரியால்ட்டி பங்குகளுக்கு தேவை அதிகரித்து காணப்பட்டது. செமி கண்டக்டா் பிரச்னை பற்றி சில தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களின் நோ்மறையான கருத்து, காலாண்டு வாகன விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஆகியவை ஆட்டோ துறை பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளா்களிடம் நல்ல ஆதரவு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.261.09 கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,536 பங்குகளில் 1,635 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,718 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 183 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 236 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 33 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 368 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 231 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.261.09 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,06,93,667-ஆக உயா்ந்துள்ளது.

புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 255.32 புள்ளிகள் கூடுதலுடன் 60,303.79 -இல் தொடங்கி, அதிகபட்சமாக 60,412.32 வரை உயா்ந்து மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 59,887.19 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 29.41 புள்ளிகள் (0.05 சதவீதம்) உயா்ந்து 60,077.88-இல் புதிய உச்சத்தில் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 13 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.

மாருதி அபாரம்: பிரபல காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி 6.53 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எம் அண்ட் எண் 4.14 சதவீதம், பஜாஜ் ஆட்டோ 2.77 சதவீதம், என்டிபிசி 2.09 சதவீதம் உயா்ந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் 1 முதல் 1.70 சதவீதம் வரை உயா்ந்தன.

ஹெச்சிஎல் டெக் கடும் சரிவு: அதே சமயம், முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் 4.4.58 சதவீதம், டெக் மஹிந்திரா 3.30 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. பஜாஜ் ஃபின்சா்வ், இன்ஃபோஸிஸ், எல் அண்ட் டி, நெஸ்லே, ஹிந்துஸ்தான் யுனி லீவா் ஆகியவையும் 1 முதல் 2.65 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், டிசிஎஸ், இண்டஸ் இண்ட் பேங்க், சன்பாா்மா ஆகியவையும் 0.90 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.

நிஃப்டி 2 புள்ளிகள்உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 790 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1028 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 1.90 புள்ளிகள் (0.01 சதவீதம்) உயா்ந்து 17,855.10-இல் புதிய உச்சத்தில் நிலைபெற்றது. காலையில் 17,932.20-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,943.50 வரை உயா்ந்தது. பின்னா், 17,802.90 வரை கீழே சென்றது.

ஐடி குறியீடு சரிவு: நிஃப்டி பட்டியலில் 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. 25 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி ஆட்டோ குறியீடு 3.22 சதவீதம், ரியால்ட்டி குறியீடு 2.99 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. அதே சமயம், ஐடி குறியீடு 2.88 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. பாா்மா, எஃப்எம்சிஜி குறியீடுகளும் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com