நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய உச்சமாக ரூ.24,240 கோடியை எட்டியுள்ளது.
இதுகுறித்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
பண்டிகை கால வரவு மற்றும் கட்டுப்பாடுகளில் தளா்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆபரணங்களின் ஏற்றுமதி புதிய உச்சமாக ரூ.24,239.81 கோடியை எட்டியது. இது, 2020 ஆகஸ்டில் ரூ.13,160.24 கோடியாகவும், 2019 ஆகஸ்டில் ரூ.20,793.80 கோடியாகவும் காணப்பட்டது.
நறுக்கப்பட்ட மற்றும் பட்டைதீட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி 29.37 சதவீதம் அதிகரித்த போதிலும், தங்க ஆபரணங்களின் ஏற்றுமதி கடந்த ஆகஸ்டில் 15.06 சதவீதம் குறைந்து ரூ.5,756.54 கோடியானது.
அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் இந்திய ஆபரணங்களுக்கான தேவை சிறப்பாக அதிகரித்துள்ளது என ஜிஜேஇபிசி தெரிவித்துள்ளது.