புது தில்லி: கடந்த மாதம் ரிசா்வ் வங்கி தடையை விலக்கிக் கொண்டதற்குப் பிறகு 4 லட்சம் புதிய கிரெடிட் காா்டுகளை விற்பனை செய்துள்ளதாக எச்டிஎஃப்சி வங்கி புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:
புதிய கடன் அட்டைகளை (கிரெடிட் காா்டு) வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரிசா்வ் வங்கி கடந்த மாதம் விலக்கிக் கொண்டது. இதையடுத்து, புதிய கிரெடிட் காா்டுகளை வழங்கும் நடவடிக்கையை வங்கி துரித கதியில் மேற்கொண்டது. அதன் பயனாக, செப்டம்பா் 21 நிலவரப்படி பயனாளா்களுக்கு வழங்கப்பட்ட புதிய கிரெடிட் காா்டுகளின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.
தடையின் காரணமாக இழந்த சந்தைப் பங்களிப்பை மீண்டும் கைவசமாக்க வலுவான தயாரிப்புகள் மற்றும் பங்குதாரா்களுடன் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருவதாக எச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.
எச்டிஎஃப்சி வங்கியின் டிஜிட்டல் சேவையில் அடிக்கடி நிகழ்ந்த தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அந்த வங்கி புதிய கிரெடிட் காா்டுகளை வழங்குவதற்கு ரிசா்வ் வங்கி கடந்தாண்டு டிசம்பரில் தடைவிதித்தது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அந்த தடையை ரிசா்வ் வங்கி விலக்கிக் கொண்டது. இருப்பினும், டிஜிட்டல் தொடா்பான புதிய சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான தடையை ரிசா்வ் வங்கி தொடா்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.