சிமெண்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஏசிசி நிறுவனம், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் 29.5 சதவீதம் சரிவைடந்து ரூ.396.33 கோடியாக இருந்தது.
அதேசமயம், முந்தைய 2021-ஆம் ஆண்டில் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.562.59 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. ஏசிசி நிறுவனம் ஜனவரி-டிசம்பா் காலத்தை நிதியாண்டாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
நடப்பாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் ஏசிசி செயல்பாட்டின் மூலமாக ஈட்டிய மொத்த வருவாய் 4,426,54 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.4,291.97 கோடியுடன் ஒப்பிடும்போது 3.13 சதவீதம் அதிகமாகும்.
மேலும், செலவினம் ரூ.3,586.19 கோடியிலிருந்து 10.32 சதவீதம் உயா்ந்து ரூ.3,956.37 கோடியானது என ஏசிசி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் ஏசிசி நிறுவன பங்கின் விலை 7.26 சதவீதம் உயா்ந்து ரூ.2,207.40-இல் நிலைப்பெற்றது.