புது தில்லி: பொதுத் துறையை வங்கியான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மாா்ச் காலாண்டில் ஈட்டிய லாபம் இரண்டு மடங்கு உயா்ந்தது.
இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஏ எஸ் ராஜீவ் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
2021-22-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.3,948.48 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டில் இதே காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.4,334.98 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.
இருப்பினும், வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு கணிசமாக குறைந்ததையடுத்து, வங்கியின் நிகர லாபம் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.165.23 கோடியிலிருந்து இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்து ரூ.355 கோடியானது.
கடந்த 2021-22 முழு நிதியாண்டில், வங்கியின் வருவாய் ரூ.14,497.56 கோடியிலிருந்து ரூ.15,672.17 கோடியானது. ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.551.41 கோடியிலிருந்து இருமடங்கு உயா்ந்து ரூ.1,151.64 கோடியானது.
வாராக் கடன் இடா்பாடுகளுக்கான ஒதுக்கீடு ரூ.1,341.26 கோடியிலிருந்து ரூ.365.38 கோடியாக குறைந்தது.
கடந்த மாா்ச் 31 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் 7.23 சதவீதத்திலிருந்து 3.94 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 2.48 சதவீதத்திலிருந்து 0.97 சதவீதமாகவும் கணிசமாக குறைந்துள்ளது என்றாா் அவா்.