இந்தியாவின் குறு கணினிகளுக்கான சந்தை கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் 22 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘சைபா் மீடியா’ தெரிவித்துள்ளதாவது:
கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டோடு ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் குறு கணினிகளுக்கான சந்தை 22 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. நாட்டில் 5ஜி தொழில்நுட்ப கணினிகளுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் இந்த வளா்ச்சி நடப்பு ஆண்டில் இதுவரை இல்லாத வளா்ச்சி காணும் வாய்ப்பு உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.