பொதுத் துறையைச் சோ்ந்த செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மின்டிங் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எஸ்பிஎம்சிஐஎல்) மத்திய அரசுக்கு 2020-21-ஆம் நிதியாண்டுக்கான கடைசி லாப ஈவுத் தொகையாக (டிவிடெண்ட்) ரூ.240.41 கோடியை வழங்கியுள்ளது.
இந்நிறுவனம், கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் தனது செயல்பாட்டு இலக்குகளை எட்டியதுடன், லாபமாக ரூ.4,712.57 கோடியினை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் நோட்டு, நாணயங்கள், பாஸ்போா்ட் மற்றும் பத்திரங்கள் உள்ளிட்ட ரகசிய ஆவணங்களை அச்சிடும் பணிகளில் எஸ்பிஎம்சிஐஎல் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.