டாடா ஸ்டீல்ஸ் மற்றும் ஐடி பங்குகளின் ஆதிக்கத்தால் பங்குச் சந்தை தொடர் ஏற்றத்தை அடைந்து வருகிறது.
இந்த ஆண்டின் 2-வது வார பங்குச்சந்தை கடந்த திங்கள்கிழமையிலிருந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகள் உயர்வால் தொடர் ஏற்றத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று(ஜன.12) 61,150.04 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 61,259.99 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 85.23 புள்ளிகள் அதிகரித்து 61.235.30 புள்ளிகளுடன் நிலைபெற்றது.
18,212.35 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 18,257.00 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 45.45 புள்ளிகள் உயர்ந்து 18,257.80 புள்ளிகளில் நிலைபெற்றது.
தொடர்ந்து அதிகரித்து வரும் ஐடி பங்குகள் நிலையான ஏற்றத்தை தக்கவைத்திருக்கின்றன.
இதையும் படிக்க| 5ஜி சேவை: நோகியா, டெக் மஹிந்திரா கைகோா்ப்பு