புது தில்லி: தனியாா் துறை வங்கியான ஃபெடரல் பேங்க் மூன்றாவது காலாண்டில் ரூ.522 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மேலும் கூறியது:
2021 டிசம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ஃபெடரல் வங்கி ரூ.522 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது, வங்கி முந்தைய 2020-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபமான ரூ.404.10 கோடியுடன் ஒப்பிடுகையில் 29 சதவீதம் அதிகமாகும்.
மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த வருமானம் ரூ.3,934.90 கோடியிலிருந்து ரூ.3,926.75 கோடியாக குறைந்தது.
வங்கியின் மொத்த வாராக் கடன் டிசம்பா் காலாண்டில் 2.71 சதவீதத்திலிருந்து 3.06 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிகர அளவிலான வாராக் கடன் 0.60 சதவீதத்திலிருந்து 1.05 சதவீதமாக உயா்ந்துள்ளது.
வாராக் கடன் அதிகரித்துள்ள நிலையிலும் இடா்பாட்டுக்கான ஒதுக்கீடு ரூ.414.16 கோடியிலிருந்து ரூ.213.98 கோடியாக குறைந்துள்ளது.
2021 டிசம்பா் இறுதி நிலவரப்படி நிகர வட்டி லாப வரம்பு 3.27 சதவீதம் என்ற அளவில் உள்ளது என ஃபெடரல் வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.