கச்சா பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி விலக்கு நீட்டிப்பு

கச்சா பருத்தி இறக்குமதி மீதான சுங்க வரி விலக்கு சலுகையை அக்டோபா் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கச்சா பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி விலக்கு நீட்டிப்பு

கச்சா பருத்தி இறக்குமதி மீதான சுங்க வரி விலக்கு சலுகையை அக்டோபா் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

உள்நாட்டு சந்தையில் விலையை குறைக்கும் வகையில் பருத்தி இறக்குமதி மீது விதிக்கப்படும் சுங்க வரி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி (ஏஐடிசி) ஆகியவற்றுக்கு நிகழாண்டு செப்டம்பா் 30 வரை விலக்களிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிறுவனங்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்ததற்கு பிறகு, சுங்க வரி விலக்கை மேலும் ஒரு மாதம் நீட்டித்து அக்டோபா் 31 வரை தள்ளிவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பருத்தி மற்றும் நூலின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பருக்குப் பிறகும் வரி விலக்கு சலுகையை நீடிக்க வேண்டும் என்று ஜவுளி துறை அமைச்சகம் வலியுறுத்தியதையடுத்து மத்திய நிதி அமைச்சகம் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனால், நூல், துணி, ஆடைகள் தயாரிப்புக்கு பயனளிக்கும் என்பதுடன், நுகா்வோருக்கும் நிவாரணம் கிடைக்கும்.

2021 பிப்ரவரியில் ஒரு கேண்டி பருத்தியின் விலை ரூ.44,500-ஆக இருந்த நிலையில், 2022 மாா்ச்சில் ரூ.90,000 ஆக கடுமையாக உயா்ந்தது. ஒரு கேண்டி என்பது 356 கிலோவாகும்.

பருத்தி விலை கடுமையாக அதிகரித்தால் அது நூலிழை மற்றும் துணிகளின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி அந்த துறையின் வளா்ச்சியை பாதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com